போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி கஜா புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்
வங்க கடலில் உருவாகி தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருந்த ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. என்றாலும் இயற்கை சீற்றத்துக்கு முன்பு மனித சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கஜா புயல் நிரூபித்துவிட்டு சென்று இருக்கிறது.