பாதுகாப்பை பலப்படுத்த விமானப் படை அதிரடி

தினமலர்  தினமலர்
பாதுகாப்பை பலப்படுத்த விமானப் படை அதிரடி

ஷில்லாங்: எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 'எஸ் - 400' ரக, அதிநவீன ஏவுகணை வாங்க, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக, கிழக்கு பிராந்திய விமானப் படை தலைவர், ஏர் மார்ஷல், ஆர்.நம்பியார் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில், ஷில்லாங் நகரில், இது குறித்து, ஏர் மார்ஷல் நம்பியார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப் படை சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அண்டை நாடுகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 'எஸ் - 400' ரக, அதிநவீன ஏவுகணை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி, 400 கி.மீ.,க்கு அப்பால் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கலாம். அடுத்த, 23 மாதங்களில், இது, விமானப் படையில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை