ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் மோடி தயாரா?: ராகுல் காந்தி கேள்வி

தினகரன்  தினகரன்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் மோடி தயாரா?: ராகுல் காந்தி கேள்வி

சட்டீஸ்கர்: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் 15 நிமிட நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நேரு குடும்பத்தை தவிர வெளிநபரை தலைவராக காங்கிரஸ் கட்சியால் நியமிக்க முடியுமா? அப்படி நியமித்தால் அக்கட்சியில் ஜனநாயகத்தை நேரு ஏற்படுத்தியுள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறேன்’’ என கூறியிருந்தார். இந்நிலையில் சட்டிஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அம்பிகாபுரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ரபேல் விமான பேரம் குறித்து தம்மை 15 நிமிடங்களுக்கு மட்டும் பேச அனுமதித்து மோடி பதில் அளிப்பாரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தமது கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை