சென்னையில் சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் நகை கொள்ளை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாவி போட்டு நகைகளை திருடிச்சென்ற அசாமைச் சேர்ந்த கோனாக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்தபோது காவலாளி நகையை திருடிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.