கொல்கத்தாவில் மிக உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தீ

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் மிக உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தீ

கொல்கத்தா: கொல்கத்தாவில் மிக உயர்ந்த கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் 60 மாடிக்கு புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுவதும் முடிவடைந்த பின்னர், இதுதான் அம்மாநிலத்தின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும். இதன் 51 மற்றும் 52வது மாடியில் நேற்று மாலை 5 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தகவல் அறிந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. உயர்ந்த கிரேன்கள் மூலம் அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டுமானத்தில் உள்ள கட்டிடம் என்பதால், உயிரிழப்பு எதுவும் இல்லை.

மூலக்கதை