காஞ்சிபுரம் பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி: 4 பேர் கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி: 4 பேர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 பக்தர்கள் நேற்று முன்தினம்  ஒரு வேனில் சபரிமலை புறப்பட்டனர். நேற்று காலை 4 மணியளவில் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் புல்லுப்பாறை பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்தது. அப்ேபாது அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 14 பேர் காயமடைந்தனர். அப்பகுதியினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு முண்டக்கயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பாபு, கார்த்திக் என்ற இரண்டு பக்தர்கள் இறந்தனர். 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குட்டிக்கானம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை