உத்தரப்பிரதேசம் அருகே தனியாக சென்ற பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இரண்டு பேருக்கு அடி உதை

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசம் அருகே தனியாக சென்ற பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இரண்டு பேருக்கு அடி உதை

உ.பி.: உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா அருகே தனியாக சென்ற கிராமத்துப் பெண்ணிடம் இரண்டு பேர் பாலியல் தொல்லை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த இருவரையும் ஊர்மக்களின் உதவியுடன் சிறைபிடித்து கட்டிப் போட்ட அந்தப் பெண் சரமாரி அவர்களைத் அடித்து உதைத்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்களிடம் தர்மஅடி வாங்கிய இருவரும், நாங்கள் இதுக்கு பிறகு இந்த மாதிரியான தவறுகளை செய்யமாட்டோம் எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கிராமமக்களிடன் இருந்து அந்த இருவரையும் மீட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மூலக்கதை