சபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு தேவஸ்தானம் மனு தாக்கல்

PARIS TAMIL  PARIS TAMIL
சபரிமலையில் பெண்கள் அனுமதி  கால அவகாசம் கேட்டு தேவஸ்தானம் மனு தாக்கல்

சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதற்கு பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு எதிர்புகளையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால், சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது. தடை உத்தரவு இருந்தும் பக்தர்களும், தேவஸ்தான போர்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இரண்டு மாத கால மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.

மூலக்கதை