5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி

தினமலர்  தினமலர்
5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி

புதுடில்லி : 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்ட, பிரதமர் மோடி 25 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

ம.பி., ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டும் அவர், 25 பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை