பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியதாக புனே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியதாக புனே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

புனே: நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்ட்டுகள் மத்திய அரசைக் கவிழ்க்கவும் பிரதமர் மோடியைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் புனே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனே கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக தெலுங்கு புரட்சிக் கவிஞர் வராவர ராவ், சமூக ஆர்வலர் சுபா பரத்வாஜ் உள்பட பலபேரை போலீசார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.இந்நிலையில் இவர்களில் முதன்மையான குற்றவாளிகளாக கருதப்படும் 10 பேர் மீதான குற்றப்பத்திரிகை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆயுதங்களுடன் அரசுக்கு எதிராக யுத்தம் தொடுக்க முயன்றதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவோயிஸ்ட்டுகளின் வீடுகளில் நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ஆதாரங்களைத் திரட்டி இந்த குற்றச்சாட்டை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் புனே போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை