மேட்டூர், கல்லணை உள்பட 11 அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? : உயர்நீதிமன்ற கிளை கேள்வி
மதுரை : மேட்டூர், கல்லணை, அமராவதி உள்பட 11 அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவி்ட்டுள்ளது. இந்த வழக்கு டிச., 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.