ரஞ்சி கிரிக்கெட் தமிழகம் டிரா ஜெகதீசன் சதம்
நெல்லை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஜெகதீசன் சதம் அடிக்க தமிழக அணி, ஆந்திராவை டிரா செய்தது. நெல்லையில் நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய தமிழக அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. முகுந்த் 101, இந்திரஜித் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முகுந்த் 178, இந்திரஜித் 33 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெகதீசன் சதம் அடித்தார். ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 409 ரன் சேர்க்க, போட்டி டிராவில் முடிந்தது. ஜெகதீசன் 131, அனிருத் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புதுவையில் நடந்த புதுச்சேரி-மேகாலயா இடையேயான லீக் போட்டியும் டிராவானது. புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 389, மேகாலயா 326 ரன் சேர்த்தன. கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சில் விளையாடிய புதுச்சேரி அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுக்க போட்டி டிராவில் முடிந்தது.