புரோ கபடி லீக் போட்டி தமிழ் தலைவாஸ்-அரியானா ஆட்டம் டிரா
மும்பை: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், அரியானா அணிகள் இடையே நடந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.
இந்நிலையில், முதல் பாதியில் 19-15 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பொறுப்புடன் விளையாடியது. இறுதியில், தமிழ் தலைவாஸ், அரியானா அணிகள் 32-32 என்ற புள்ளிகள் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதேபோல், மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. பெங்களூரு அணியை 32-29 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி வீழ்த்தியது. இது, இந்த அணி பெறும் 9வது வெற்றியாகும். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 3ல் மட்டுமே வென்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் டிரா செய்துள்ளது. இன்னும் 11 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், 9 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.