கார்த்திகை தீப விழாவுக்கு மலைக்கோட்டையில் தயாராகும் கொப்பரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கார்த்திகை தீப விழாவுக்கு மலைக்கோட்டையில் தயாராகும் கொப்பரை

திருச்சி: தென்கயிலாயம் என அழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றுவருகிறது.   இதற்காக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு பிரமாண்ட செப்பு கொப்பரை  வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பூஜை கடந்த 11ம் தேதி துவங்கியது.

 

கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பருத்தி துணியில் 300 மீட்டர் நீளத்தில் திரியும், இலுப்பை எண்ணெய்,  நல்லெண்ணெய், நெய் ஆகியவை மொத்தம் 900 லிட்டரும் ஏற்பாடு செய்யப்பட்டது.

திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்றுமாலை துவங்கியது. திரியை  பகுதி பகுதியாக பணியாளர்கள் மலை உச்சிக்கு எடுத்து வந்தனர்.

கோபுரத்தின் மேலே உள்ள கொப்பரைக்கு திரியை கயிறு கட்டி இழுத்து கொப்பரையின் மேல்  திரியை வைத்தனர். முதலில் ஒரு பகுதி திரி மட்டும் வைக்கப்பட்டு அதில் எண்ணெய் ஊற்றும் பணி நடந்தது.

தொடர்ந்து கொப்பரையில் மற்ற பகுதிகளில் திரி  வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்படும்.



.

மூலக்கதை