சர்வதேச செஸ் போட்டி சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச செஸ் போட்டி சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்

கொல்கத்தா:  சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச அளவிலான செஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்,  அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர்.

இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், தலா 12. 5 புள்ளிகள் பெற்றனர்.

இதையடுத்து நடந்த டைபிரேக்கர் போட்டியில், ஆனந்த் வெற்றிபெற்று 1-0 என்ற  கணக்கில் முன்னிலை வகித்தார். 2வது போட்டி டிரா ஆன நிலையில், ஆனந்த் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

இப்போட்டிகளில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா 6வது இடத்தையும், விதித் 7வது இடத்தையும் பிடித்தனர்.   சூர்யசேகர், சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா  ஆகியோர் கடைசி 2 இடங்களை பிடித்தனர்.

.

மூலக்கதை