பாரம்பரிய முறைப்படி நடிகை தீபிகா-ரன்வீர் சிங் திருமணம்: இத்தாலியில் நடந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரம்பரிய முறைப்படி நடிகை தீபிகாரன்வீர் சிங் திருமணம்: இத்தாலியில் நடந்தது

மும்பை: நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நேற்று மாலை சிந்தி மற்றும் சீக்கிய பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் தீபிகா படுகோன். ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ மோஷன் கேப்சர் அனிமேஷன் படத்தில்  நடித்தார்.

தீபிகாவும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம்  நடந்தது.

இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில் பங்கேற்க இரண்டு தினங்களுக்கு முன் தீபிகா, ரன்வீர் தங்களது குடும்பத்தினருடன் இத்தாலி  புறப்பட்டு சென்றனர்.

தீபிகா கர்நாடகாவை சேர்ந்தவர், ரன்வீர் சிங் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

இவர்களது திருமணம் கர்நாடக சிந்தி பாரம்பரிய முறைப்படியும், சீக்கிய பாரம்பரிய  முறைப்படியுமாக இருவிதமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை சிந்தி பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

இன்று சீக்கிய மத முறைப்படி  திருமணம் நடக்கிறது.

திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை