பாஜ இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது: முத்தரசன் திட்டவட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:அகில இந்திய தேசிய கட்சிகளில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பாஜ தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுதந்திரமாக செயல்படக்கூடிய சிபிஐ, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜவை எதிர்த்து 2019 தேர்தலுக்காக ஒன்று கூடி வருகிறோம். 2019 தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வருவது கடுகளவும் நிறைவேறாது.
பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்துவதாக தமிழக அரசு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே எடுத்து வருகிறது. இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடுவோருக்கு காவல்துறையும் உடந்தையாக இருந்து வருகிறது.
இயற்கை சீற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.