தொழிற் புரட்சியால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தொழிற்புரட்சியால், இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளதாக.பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.

 பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பின்டெக் விழாவில் பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:

உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. டிஜிட்டல் நிதித்துறையில் சிங்கப்பூர் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. அது 130 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது.

உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம் புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாகவும் உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கித் தருகிறது. 

2014 ம் ஆண்டு என்து தலைமையிலான ஆட்சி வந்த பிறகு,  ஒவ்வொரு புறநகர் கிராமங்களிலும் வளர்ச்சித் திட்டங்களால்.மக்களின் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை (ஆதார்)  வழங்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணப்பரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்து உள்ளது.

 ஒவ்வொரு மாதமும் பண பரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா. விரைவில் உலகின் தொடக்க மையமாக இந்தியா மாறும். 120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளது. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை