கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்

PARIS TAMIL  PARIS TAMIL
கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 380 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 400 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும். புயல் கரையைக்கடக்க்கும் போது வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை