வேலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தியவர் பணத்தை திரும்ப தரமுடியாததால் தற்கொலை

தினகரன்  தினகரன்
வேலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தியவர் பணத்தை திரும்ப தரமுடியாததால் தற்கொலை

வேலூர்: வேலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி திரும்ப தரமுடியாததால் குமரேசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஜோலார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக குமரேசன் மீது புகார் அளிக்கப்பட்டது. பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தோர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், குமரேசன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை