சர்வதேச குத்துச்சண்டை நாளை துவக்கம் தங்கம் வெல்வாரா மேரிகோம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச குத்துச்சண்டை நாளை துவக்கம் தங்கம் வெல்வாரா மேரிகோம்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில், நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

70 நாடுகளை சேர்ந்த சுமார் 300 வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இப்போட்டியில், இந்தியா சார்பில் மேரிகோம், சரிதா தேவி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இப்போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனையான மேரிகோம் 6வது முறையாக தங்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

35 வயதான மேரிகோம் ஏற்கனவே சர்வதேச சாம்பியன்ஷிப்பில் 5 முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த முறை 48 கிலோ எடைபிரிவில் களமிறங்குகிறார்.

இதுகுறித்து மேரிகோம் கூறுகையில், ‘‘சொந்த மண்ணில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடுவேன்’’ என்றார்.   2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், ஆசிய விளையாட்டில் தங்கமும் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் மேரிகோம் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை