தீபிகா வீட்டிற்குக் குடி போகும் ரன்வீர்

தினமலர்  தினமலர்
தீபிகா வீட்டிற்குக் குடி போகும் ரன்வீர்

பாலிவுட்டின் பெரிய திருமணமான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இன்றும், நாளையும் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமா என்ற இடத்தில் நடைபெறகிறது. நேற்று சங்கீத் நிகழ்வு நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் திருமணத்தை முன்னிட்டு புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் புதிய தகவலாக திருமணத்திற்குப் பின் ரன்வீர் சிங், தீபிகாவின் அபார்ட்மென்ட்டுக்குப் போகப் போகிறாராம். இருவருக்குமே மும்பையில் சொந்த வீடு இல்லை. சொந்தமாக வீடு வாங்கும் வரை தீபிகாவின் வீட்டில் ரன்வீர் வசிக்கப் போவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த பின் இருவரும் பெங்களூருவிலும், மும்பையிலும திருமண வரவேற்பு வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை