ஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்! - போக்குவரத்து பாதிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்!  போக்குவரத்து பாதிப்பு!!

நபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 
 
செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், பரிசின் முதலாம் வட்டாரத்தில் உள்ள jardin des Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை திருடியுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தலையிட்டு, குறித்த நபரை கைது செய்ய முற்பட்டுள்ளனர். ஆட்டுடன் தப்பிச் சென்ற நபர், Tuileries நிலையத்துக்குள் நுழைந்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. 
 
வெள்ளைட்டைக் கொண்டு முதலாம் இலக்க மெற்றோவுக்குள் ஏறியுள்ளா. இதனால் தொடரூந்து நிறுத்தப்பட்டது. RATP பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்ய முற்பட்டனர்.  Concorde இல் இருந்து சத்தலே (Châtelet) வரை போக்குவரத்து தடைப்பட்டது. காலை 8.40 மணியில் இருந்து அடுத்த 15 நிமிடங்களுக்கு முதலாம் இலக்க சேவைகள் தடைப்பட்டன. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், வெள்ளாடு Tuileries தோட்டத்துக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது.

மூலக்கதை