இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பாலியல் புகார்

PARIS TAMIL  PARIS TAMIL
இயக்குனர் மீது ராதிகா ஆப்தே பாலியல் புகார்

 கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர். தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

 
இப்போது யார் என்று பெயரையும்இ படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறும் போதுஇ “தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது பெயர் சரியாக நினைவில்லை.
 
அந்த இயக்குனர் நடிகர் விக்ரமை வைத்து பீரியட் படம் இயக்க உள்ளதாகவும்இ நீங்கள் நடித்தால் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்றும் கூறி என்னை ஆடி‌ஷனில் பங்கேற்கும்படி அழைத்தார். இதனால் அவர் தங்கிய ஓட்டலுக்கு சென்றேன். ஒரு அறையில் 12 பேருடன் இயக்குநர் அமர்ந்திருந்தார். என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.
 
பின் ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பிறகு நடனமாட சொல்லிஇ சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார்.
 
 
 
அவர் தன் படத்துக்காகத்தான் ஆடி‌ஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லிஇ அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். விக்ரமை வைத்து கரிகாலன் என்னும் படம் தொடங்க திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது. எனவே அந்த இயக்குனரா என்று சினிமாவில் கேள்வி எழுந்துள்ளன.
 

மூலக்கதை