நவம்பர் 13 தாக்குதல்! - பலூன்கள் பறக்கவிட்டு ஆன் இதால்கோ அஞ்சலி!!
நேற்று நவம்பர் 13 கோத தாக்குதலின் நினைவு நாளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பரிசில் பத்தகலோன் திரையரங்கில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 90 பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலின் மூன்றாம் வருட நினைவு தினத்தின் போது, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, மற்றும் பிரதமர் எத்துவா பிலிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது, மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பலூன்களும் பறக்கவிடப்பட்டன. பரிஸ் மற்றும் செந்தனியில் இடம்பர்ற இந்த நவம்பர் 13 தாக்குதலில், 130 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.