பரிஸ் - தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு!!

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான ஆண் பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
அறையில் உள்ள கட்டிலில், பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. பெண்ணின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். ஆணின் சடலம் அறையின் குளியலறையில் கிடந்துள்ளது. அவரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அறைக்குள் இருந்து இரண்டு கைத்துப்பாக்கி, கலிபர் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்டுள்ளனர். தங்குமிட நிர்வாகி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 
முதல்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது ஒரு தற்கொலைச் சம்பவமாகவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 17 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலக்கதை