திருவனந்தபுரத்தில் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் ஐப்பசி திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்வருட ஐப்பசி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. நேற்று இரவு பள்ளிவேட்டை நடந்தது. இன்று பிரசித்திப் பெற்ற ஆறாட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும். இன்று மாலை கோயிலில் இருந்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராமவர்மா தலைமையில் ஆறாட்டு ஊர்வலம் நடக்கும்.இந்த ஊர்வலம் பாரம்பரியமாக திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக சங்குமுகம் கடலுக்கு செல்லும். அங்கு விழா நடைபெறும். பின்னர் விமான ஓடுபாதை வழியாக திரும்பி வரும். 100 ஆண்டுக்கு மேலாக ஊர்வலம் நடக்கிறது. விமான நிலையம் வழியாக ஊர்வலம் செல்வதால் இன்று பிற்பகலுக்கு பின்னர் 4 விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.