போதை விமானியின் பதவி பறிப்பு

தினமலர்  தினமலர்
போதை விமானியின் பதவி பறிப்பு

புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, டில்லி வர வேண்டிய, ஏர் - இந்தியா
விமானத்தை, நம் நாட்டை சேர்ந்த விமானி அரவிந்த் கத்பாலியா இயக்குவதாக இருந்தது. அவர் மது அருந்தி, விமானத்தை இயக்க முயன்றது தெரிய வந்ததால், உடனடியாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். இந்நிலையில், விமானத்தை இயக்குவதற்கு முன், மது அருந்திய, அரவிந்த் கத்பாலியாவின், பதவியை பறித்து, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை