டி-20 கிரிக்கெட் தரவரிசை ரோகித், தவான் முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20 கிரிக்கெட் தரவரிசை ரோகித், தவான் முன்னேற்றம்

புதுடெல்லி:  டி-20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில், கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் பந்து வீச்சாளர்கள் புவனேஷ்குமார், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் டி-20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 3 இடங்கள் உயர்ந்து 7வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார்.

இத்தொடரில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் 14 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் வரிசையில் 23வது இடத்துக்கு முன்னேறினார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் முன்னேறி 19வது இடத்திலும், பும்ரா 5 இடங்கள் முன்னேற்றி 21வது இடத்திலும் உள்ளனர்.



ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளது. முகமது 2வது இடத்திலும், வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி 4ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணி 2வது இடம்: அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணி 138 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி 127 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.   ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறும் போட்டி மற்றும் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின்னர் அணிகள், வீரர்களின் தரவரிசையில் மாற்றங்கள் இருக்கும். 3 போட்டிகளில் வெல்லும்பட்சத்தில் 129 புள்ளிகளுக்கு இந்திய அணி முன்னேறும்.

ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வென்றால் 2வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை