ஹாங்காங் ஓபனில் சிந்து, சாய்னா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாங்காங் ஓபனில் சிந்து, சாய்னா

ஹாங்காங்: சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் பங்கேற்கின்றனர். சர்வதேச பாட்மின்டன் 500 சீரிஸ் போட்டிகள் சீனாவின் ஹாங்காங்கில் இன்று தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது.

இதில், இந்திய நட்சத்திர வீராங்கனைகளான சிந்து, சாய்னா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகளில் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு உலக சாம்பியன், ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பி. வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

மேலும், உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவை சேர்ந்த டைசூயிக்கு சவாலாக விளங்கினார். இந்திய ஓபன், தாய்லாந்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேறியிருந்தார்.



இந்நிலையில், ஹாங்காங்கில் நடைபெறும் முதல் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜின்டாபோலை சந்திக்கிறார். சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அகேன் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.

ஆடவர் பிரிவில் நடைபெறும் போட்டிகளில் இந்திய வீரர்களான பிரணாய், காந்த், சாய் பிரணித் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா- சிக்கி, சாத்விக்-ரங்கி, மனு அட்ரி- சுமித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

.

மூலக்கதை