தற்கொலைக்கெதிராகப் போராடிய காவற்துறை வீராங்கனை தற்கொலை - அதிர்ச்சியில் காவற்துறை!!
தொடர்ச்சியாகக் காவற்துறையினர் தற்கொலை செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்தே வருகின்றது.
இதற்கெல்லாம் ஒரு தீர்வை உருவாக்கும் நோக்கில், காவற்துறையினரின் குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த காவற்துறை வீராங்கனை Maggy Biskupski, Mobilisation des policiers en colère எனும் ஒரு அமைப்பினை ஆரம்பித்து இருந்தார். 2016 ஆம் ஆண்டு Grande-Borne (Viry-Châtillon et Grigny)இல் காவற்துறையினரைக் கொழுத்தியதையடுத்துக் காவற்துறையினர் போராட்டம் நடாத்தியபோதே அவர்களிற்கான இந்த அமைப்பை இவர் ஆரம்பித்தார்.
இதில் தீவிரமாக இயங்கி வந்த இவரே, நேற்றிரவு, தனது சேவைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
36 வயதுடைய இவர், Carrières-sous-Poissy (Yvelines) இல் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வேர்செய் காவற்துறையினர் இந்தத் தற்கொலை குறித்த தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.