சோம்ப்ஸ்-எலிசே : லம்போர்கினி மகிழுந்துக்குள் இருந்து சிங்கக்குட்டி மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசே : லம்போர்கினி மகிழுந்துக்குள் இருந்து சிங்கக்குட்டி மீட்பு!!

நேற்று திங்கட்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து சிங்க குட்டி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று, நவம்பர் 12 ஆம் திகதி, காவல்துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,  20:00 மணிக்கு சற்று முன்னதாக லம்போர்கினி நிறுவனத்தின் ஆடம்பர மகிழுந்து ஒன்றை நிறுத்தியுள்ளனர். மகிழுந்தை ஓட்டி வந்தவர்களை சாதாரணமாக விசாரித்துக்கொண்டிருக்கும் போது, மகிழுந்துக்குள் சிங்க குட்டி ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
மகிழுந்துக்குள் இருந்த மற்றைய இருவருடன் சேர்த்து சாரதியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிங்க குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த மகிழுந்து வாடகை மகிழுந்து எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை