கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை, கடலூர், ராமநாதபுரத்திற்கு மீட்புக்குழு விரைவு

தினகரன்  தினகரன்
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை, கடலூர், ராமநாதபுரத்திற்கு மீட்புக்குழு விரைவு

சென்னை: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து மீட்பு படையினர் புறப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர், ராமநாதபுரத்துக்கு 3 பேரிடர் மீட்புக்குழுக்களும், சிதம்பரத்துக்கு 2 குழுக்களும், நாகப்பட்டினத்துக்கு 3 குழுக்களும் விரைந்து சென்றுள்ளது. ஒவ்வொறு குழுவிலும் தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 35 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை