ஜிசாட்- 28 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி 14-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஜிசாட் 28 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி 14ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்!

ஜிசாட்-29 செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி  விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. 

நவம்பர் 14 -ந் தேதி மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படும். 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ எடுத்துச்செல்கிறது. 

மழை, புயல் காரணமாக ஏவப்படாது என செய்தி வெளியான நிலையில் ஜிசாட்-29 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 அல்லது 15ஆம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முதலில் கூறியது. ஆனால் தற்போது சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-29 செயற்கைகோள் ஏவப்படாது என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளது. 

ஆனால் இந்த தகவலை இஸ்ரோ மறுத்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மாக்-3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும், இந்த ராக்கெட் புயல் காரணமாக ஏவப்படாது என செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை