நிதியை உயர்த்தணும்: பழங்குடியினர் மனு

தினமலர்  தினமலர்
நிதியை உயர்த்தணும்: பழங்குடியினர் மனு

ஊட்டி:அனைவருக்கும் வீடு கட்டும் திட்ட நிதியை உயர்த்தி தர கோரி பழங்குடியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நரசிம்மன் பெட்ட குரும்பர் மேம்பாட்டு குழு மாதன் கலெக்டருக்கு அளித்த மனு:கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் , காட்டுநாயக்கர் மற்றும் பெட்ட குரும்பர் பழங்குடியினர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 2.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி போதுமானதாக இல்லாததால் மேற்கொண்டு வீடுகளை கட்ட முடியவில்லை. நிதியை உயர்த்தி தர தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை