தந்தை இறந்த செய்தியறிந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

PARIS TAMIL  PARIS TAMIL
தந்தை இறந்த செய்தியறிந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
 
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
 
வவுனியா - கற்குளம் 4ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
 
இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கற்று வரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அவர் உடனடியாக வவுனியா வருவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
இந்த சந்தர்ப்பத்தில் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
 
தற்பொழுது மதுசாவின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மூலக்கதை