Sevran : மிக மோசமான தீ விபத்து! - 23 பேர் காயம்! - 60 தீயணைப்பு படையினர் குவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Sevran : மிக மோசமான தீ விபத்து!  23 பேர் காயம்!  60 தீயணைப்பு படையினர் குவிப்பு!!

இன்று திங்கட்கிழமை அதிகாலை Sevran பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருகின்றனர். 
 
Sevran பகுதியில் உள்ள இரண்டடுக்கு கட்டிடம் ஒன்று இன்று திங்கட்கிழமை நவம்பர் 11 ஆம் திகதி அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. கட்டிடத்துக்குள் இருந்த 80 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 23 பேர் வரை தீயில் சிக்குண்டு காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, உயிருக்கு போராடி வருகின்றனர். இவர்களில் ஐவர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சம்பவ இடத்துக்கு 66 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினார்கள். மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும். 
 

மூலக்கதை