சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்: முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது

தினமலர்  தினமலர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று 18 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் தெரிவித்திருப்பதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ள 18 தொகுதிகளுக்கு இன்று முதற் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்குகிறது. மாலை 3 மணி வரையில் ஓட்டு பதிவு நடைபெறும். மேலும் ராஜ் நந்தகான் பகுதிகுட்பட்ட 5 தொகுதிகள், மற்றும் பாஸ்டர் பகுதிக்குட்பட்ட 3 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கும் எனவும், மாலை 5 மணி வரையில் ஓட்டு பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை