மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்

தினமலர்  தினமலர்
மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்

பெங்களுரூ: மத்திய அமைச்சர் அனந்த குமார் உடல் நல குறைவு காரணமாக காலமானார். மத்திய ரசாயனம் ,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் அனந்த குமார். இவர் புற்று நோய் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் காலமானார்.

இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 தடவை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெறற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ரசாயனம் ,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

மத்திய அமைச்சர்கள் இரங்கல்



மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



மூலக்கதை