அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்த டொனால்ட் ட்ரம்ப்!!
நேற்று சனிக்கிழமை காலை பரிசுக்கு வந்திருந்த டொனால்ட் ட்ரம்ப், மக்ரோனுடன் சந்திப்பை நிகழ்த்தி விட்டு, அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறு நிமிடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதனை இரத்துச் செய்துள்ளார்.
நண்பகலுக்கு சற்று பின்னதாக Bois Belleau (Aisne) இல் உள்ள அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் பயணப்படுவதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பரிசில் பெய்திருந்த கடுமையான மழை காரணமாக இந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இது தொடர்பாக அறிவித்த தகவல்களின் படி, 'ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் கலந்துகொள்ள இருந்த Bois Belleau அஞ்சலி நிகழ்வு மோசமான காலநிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது!' என அறிவித்துள்ளது.
அதேவேளை, நேற்று காலை மக்ரோனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே முறுகல் நிலை இருந்ததாக பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.