இவ்வருடத்தில் முறியடிக்கப்பட்ட ஆறு பயங்கரவாத தாக்குதல்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இவ்வருடத்தில் முறியடிக்கப்பட்ட ஆறு பயங்கரவாத தாக்குதல்கள்!!

இவ்வருடத்தில் முறியடிக்கப்பட்ட ஆறு பயங்கரவாத தாக்குதல்கள்!!

இவ்வருட ஜனவரியில் இருந்து, இதுவரை பிரான்சில் மொத்தமாக ஆறு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர் Christophe Castaner இன், செயலாளர் Laurent Nunez, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என நம்பப்படும் இந்த வேளையில், கடந்த ஐந்து வருடங்களில், நவம்பர் 2013 தாக்குதலில் இருந்து இதுவரை 55 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருட ஜனவரியில் இருந்து மட்டும் மொத்தம் ஆறு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் முன்னர் போன்று இல்லை எனவும், அவர்கள் தளர்வடைந்துள்ளனர் எனவும், அதேவேளை பிரெஞ்சு பாதுகாப்பு படை முன்னரை விட தற்போது மேலும் வேகமாக செயற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

மூலக்கதை