சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! - நான்கு பெண்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!  நான்கு பெண்கள் கைது!!

வீடற்ற நபர் ஒருவரின் சடலம் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
Amfreville-la-Mivoie (Seine-Maritime) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை நவம்பர் 4 ஆம் திகதி குறித்த Amfreville-la-Mivoieல் இருந்து 45 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டிருந்தனர். தலை கை கால்கள்  இல்லாமல் தனியே உடல் மட்டும் இருந்ததாகவும், சடலத்தை அடையாளம் காண முடியவில்லை எனவும் தெரிவித்த காவல்துறையினர் அதன் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 
 
குறித்த நபரின் காதலியை விசாரணைகளுக்கு உட்படுத்திய காவல்துறையினர், அதன் பின்னர் காதலியின் தாயாரையும் கைது செய்தனர். தொடர்ந்து, கடந்த புதன்கிழமை தெற்கு Rouen மாவட்டத்தின் Pont-de-l'Arche பகுதியில் இருந்து குறித்த கொலைச் சம்பவத்தில் பயன்டுத்திய ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்தனர். இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு பெண்களையும் கைது செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

மூலக்கதை