சத்தீஷ்கர் மக்களுக்கு ராகுல் ' பொழுதுபோக்கு' ரமண்சிங் பேச்சு

தினமலர்  தினமலர்
சத்தீஷ்கர் மக்களுக்கு ராகுல்  பொழுதுபோக்கு ரமண்சிங் பேச்சு

ராய்ப்பூர்:: சத்தீஷ்கர் மக்களுக்கு காங். தலைவர் ராகுல் பொழுதுபோக்காகிவிட்டார் என சத்தீஷ்கர் முதல்வர் ரமண்சிங் கூறினார். சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நாளை முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்றுடன் பிரசாரம் ஒய்ந்தது. நேற்றைய பிரசாரத்தில் காங். தலைவர் ராகுல் பேசுகையில், பிரதமர் மோடி, தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் 15 முக்கிய தொழிலதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ரமண்சிங் பேசியது, ராகுலுக்கு என்ன தெரியும் பொய்யான குற்றச்சாட்டை கூறிவருகிறார்.இதனை சத்தீஷ்கர் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.சத்தீஷ்கர் மாநில மக்களுக்கு ராகுல் பொழுதுபோக்காகிவிட்டார் என்றார்.

மூலக்கதை