தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்

புதுடில்லி: அண்டை மாநிலங்களில், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை புகை வெளியேற்றத்தாலும், டில்லியில், காற்று மாசு அதிகரித்துள்ளது. பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், மாநில மக்கள் அவதிப்படும் தருணத்தில், அவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆம் ஆத்மியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடும்பத்தோடு, வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவாலின் இந்த செயலுக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கெஜ்ரிவால் வெளிநாடு சென்றது குறித்து, அந்த கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

மூலக்கதை