பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
 
இலங்கை அணியின் தலைமைபயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை தொடர்ந்தே சரித்சேனநாயக்க தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.
 
சண்டிக ஹதுருசிங்க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
காலியில் இலங்கை அணி தோல்வியடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.
 
ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்விகளின் பின்னர் அணிமுகாமையாளர் மீது கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும் தனிநபர் ஒருவர் தனது குறைபாடுகளிற்காக என்னை குற்றம்சாட்டுவதை ஏற்க நான் தயாரில்லை என சரித் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலக்கதை