தீயணைப்பு துறையினரின் கலண்டர்! - விற்பனைக்கு வந்தது!!

PARIS TAMIL  PARIS TAMIL
தீயணைப்பு துறையினரின் கலண்டர்!  விற்பனைக்கு வந்தது!!

பரிஸ் தீயணைப்பு படையினரின் கலண்டர் இன்று சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
தீயணைப்பு படையினருக்கான நன்கொடை சேகரிப்பதற்காக வருடந்தோறும் கலண்டர்கள் விற்பனையை பரிஸ் தீயணைப்பு துறை மேற்கொண்டு வருகின்றது. அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான கலண்டர்களை இன்று சனிக்கிழமை நவம்பர் 10 ஆம் திகதி முதல் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இம்முறை "தீயணைப்பு வீரர்களின் விளையாட்டு குணங்கள்" எனும் கருத்துக்கமைவாக கலண்டர்கள் வடிவமடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வருடம் தோறும், l'Association pour le développement des oeuvres sociales des sapeurs-pompiers (தீயணைப்பு வீரர்களின் சமூக சேவைகள் அபிவிருத்தி சங்கம்) இந்த நன்கொடை திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இம்முறை இக்கலண்டர்கள் உங்கள் வீடுகளுக்கு விற்பனைக்கு வரவில்லை என்றால், அருகில் உள்ள தீயணைப்பு படை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை