விவசாயிகள் கடன் ரத்து ம.பி.,யில் காங்., வாக்குறுதி

தினமலர்  தினமலர்
விவசாயிகள் கடன் ரத்து ம.பி.,யில் காங்., வாக்குறுதி

போபால்,:'மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடனை ரத்து செய்வோம்' என, காங்கிரஸ் வாக்குறுதி அளித்துஉள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல், ௨௮ல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில், காங்., சார்பில், தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. போபாலில், ம.பி., மாநில, காங்., தலைவர் கமல்நாத் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கூறியிருப்பதாவது:ம.பி.,யில், ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். பசுக்களை பாதுகாக்க, கோசாலைகள் அமைக்கப் படும். விவசாயிகளின் மின் கட்டணம், ௫௦ சதவீதம் குறைக்கப்படும்.ஒவ்வொரு குடும்பத்திலும், வேலையில்லாத இளைஞருக்கு, ௧௦ ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு, ௫௧ ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை