நான்கு நாட்கள் கடந்தும் வெளிவரும் உடலங்கள்!!
மார்செய் நகரில் இடிந்து வீழ்ந்த குடியிருப்புக் கட்டங்களின் இடிபாடுகளிற்குள் இருந்து, எட்டாவது உடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இதுவே இறுதி உடலம் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு இடிந்து வீழ்ந்த சமயத்தில், இந்த வீட்டில் இருந்த 5 பேரும், வெளியே இருந்த மூவருமே காணாமற் போயிருந்தனர் எனவும், எட்டு உடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர், 690 கனமீற்றர்கள் இடிபாடுகளை வெளியேற்றி உள்ளனர். மொத்தமாக 1500 மீற்றர்கள் இடிபாடுகள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கே வெளியேற்றப்பட்டுள்ளது.
அனைத்து உடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் இடிபாடுகள் விரைவாகவே வெளியேற்றப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.