நான் பிரதமர் வேட்பாளர் அல்ல சந்திரபாபு நாயுடு பேட்டி
சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளை மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க் கட்சியினரை துன்புறுத்தவே பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது.