11 நவம்பர் - அவதானம் - நெருக்கடிக்குள்ளாகும் போக்குவரத்து!!
11 நவம்பர் 1918 ஆண்டு, முதலாம் உலகப்போரின் வெற்றிநாளின், நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில், பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்த கொள்ள இருப்பதால், பரிசிற்குள்ளும், பரிசின் புறநகர்ப் பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் பெருமளவில் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரிசின் பல பகுதிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்திற்குத் தடை செய்யப்படுவதால் இந்த நெருக்கடிகள் ஏற்பட உள்ளன.
வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுமல்லாது, மெட்ரோ மற்றும் பேருந்துப் போக்குவரத்துக்களும், பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட உள்ளன. பல மெட்ரோ நிலையங்களின் வெளியேறும் பாதைகள் மூடப்படவும் உள்ளன. பல நலையங்களில் மெட்ரோ நிறுத்தப்பட மாட்டாது.
இந்த நெருக்கடிகள் இன்று மாலை முதலே ஆரம்பிக்க உள்ளன.
பரிசின் உட்சுற்று மற்றும் வெளிச்சுற்று வீதிகளின் (périphériques) பெரும் பகுதிகள் பல மணி நேரங்கள் மூடப்பட உள்ளன என்பதும் குறிப்படத்தக்கது.